Posts

டாக்டர் - ஒரே நாளில் ரூ.8.50 கோடி வசூல்! வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு

Image
 சினிமா உலகை பொறுத்தவரையில் நடிகர்கள் எப்போதும் தங்களது படங்களின் மூலம் மோதிக் கொள்வது வழக்கம். ரியல் லைஃப்ல நல்ல நண்பர்களாக இருந்தாலும் படம்ன்னு வந்துட்டா யார் மாஸ்ன்னு அவங்க நினைக்கிறாங்களோ இல்லையோ, அவர்களின் ரசிகர்கள்  ஒரு பிரச்சனையை விட்றுவாங்க. இதுதான் காலங்காலமா தமிழ் சினிமாவுல நடந்துட்டு வருது.  ரஜினி கமல், விஜய் அஜித் ஆகியோர்களை தொடர்ந்து அடுத்ததாக வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தால பெரிய நடிகர்களுடன் மோதுகின்றன. இதனால் சினிமா உலகில் வசூல் வேட்டை பாதிக்கப் படுவதாகவும் சொல்லப்படுது. இதை உணர்ந்து கொண்ட ஒரு சில டாப் நடிகர்கள் முக்கியமான நாட்களில் சொலோவாக வெளிவந்து வசூல் வேட்டை நடத்துவதால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் நல்ல லாபத்தை ஈட்றாங்க. அப்படி போட்டியே இல்லாம ரிலிஸ் ஆகி வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கும்  “டாகடர்” படத்தை பற்றிதான் இந்த வீடியோவுல பாக்கப்போற்றோம். இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் காமெடி கலந்த திரைப்படமாக எடுத்திருக்கிறாரு. இந்த படத்திற்கு தற்போது மக்கள் கூட்டம் அலை அலையாக அதிகரிச்சிட்டே ...

தலைவி பட சர்ச்சை - பதில் சொல்வாரா தலைவா இயக்குநர்?

Image
தலைவா படத்திற்கு தலைவியால் சர்ச்சை. இப்போது தலைவி படத்திற்கு யாரால் சர்ச்சை? தலைவி படம் குறித்து பல விதமான சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. இயக்குநர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதாவின் வரவாற்றை திரிக்கிறார், புனைவு என்ற பெயரில் எம்.ஜி.ஆர்.-ஐ அவமதித்துள்ளார், நடக்காத நிகழ்வுகளை நடந்ததுப்போல சித்தரித்துள்ளார், ஆர்.எம்.வீரப்பனை முழுவதுமாக ஜெயாவுக்கு வில்லனாக காண்பித்து உண்மைக்கு புறம்பாக படத்தை எடுத்துள்ளார் என்று பல விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு கொடுத்த பேட்டியில் கூறும்போது, எம்ஜிஆர் என்றைக்குமே பதவிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது. 1967-ல் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டடிப்பட்ட எம்ஜிஆரின் போஸ்டர்கள் பட்டிதொட்டியெங்கும் ஒட்டப்பட்டு திமுக மிகப்பெரிய வெற்றியைப்பெற எம்ஜிஆர் காரணமாக இருந்தார். அப்போது அண்ணா அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தபோது எம்ஜிஆர் மறுத்து நான் நடிகராகவே இருக்கிறேன் என்று ஒதுங்கிக் கொண்டார். அவரை மரியாதை செய்யும் விதமாக சிறுசேமிப்புத் திட்ட தலைவர் பதவியை உருவாக்கி அண்ணாவே கொடுத்தார். எம்ஜிஆர் கேட்கவில்லை, அண்ணாவே கொ...

ஓடிடியில் ஆங்கராகும் மீம்ஸ் நாயகன் வைகைப்புயல் வடிவேலு

Image
     மீம்ஸ் நாயகன், மீம் க்ரியேட்டர்களின் கடவுள், வைகைப்புயல் வடிவேலுவ திரையில கடைசியா மெர்சல் படத்துல பாத்தது. அதன்பிறகு இப்போவரைக்கும் மீம்ஸ் வழியாகதான் அவர் பார்க்க முடியுது. இப்போ வடிவேலு, ஓடிடி தளத்துல அடியெடுத்து வைக்கப்போறதா ஒரு தகவல் கிடைத்திருக்கு. இந்த தகவல் மட்டும் உறுதியான நிச்சயமா வடிவேலு ஃபேன்ஸ்-க்கு செம ட்ரீட்டு இருக்கு. அப்படி என்ன பண்ணப்போறாரு, என்ன வாய்ப்பு-ன்னு விரிவா பார்க்கலாம் வாங்க! நம்ம அன்றாட வாழ்க்கையில எதாவது ஒரு தருணத்துல வடிவேலு காமெடியோ, அவரின் காமெடி டயலாக்கையோ பயன்படுத்தாம இருந்ததே இல்ல. அப்படிப்பட்ட ஒரு இடத்த மக்கள் மத்தியில தன்னோட நகைச்சுவை மூலமும், நடிப்பின் மூலமும் பெற்றுயிருக்காரு. மெர்சல் படத்துக்கு அப்பறம் பெரிய அளவுல படவாய்ப்பு இல்லாமல் இருந்தாலும், வந்த சில வாய்ப்புகளையும் நிராகரித்த வந்த வடிவேலு, இப்போ நாய் சேகர் என்ற படத்துல நடிச்சிட்டு வர்றாரு. ஒரு காலத்துல வடிவேலு காமெடிகளுக்காகவே சில படங்கள் ஓடியிருக்கு. அந்த அளவுக்கு திறமையான நடிகர் வடிவேலு. ஆனால், இடையில சில காலம் அரசியல் ஆசை வந்த வடிவேலு, 2011 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுகவ...

அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம்..!

Image
அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம்..! அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மக்களின் கவனத்தையும் நம்பிக்கையும் ஈர்ப்பதற்காகச் சமுக வலைத்தளத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக், அரசியல் விளம்பரங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதன்மூலம் தவறான தகவல்கள் பரப்படுவதும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் பேஸ்புக், ட்விட்டர். இன்ஸ்டாகிராம் போன்ற சமுக வலைத்தளங்களையே அனைவரும் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் செய்யப்படும் விளம்பரங்கள், வணிக ரீதியிலான விளம்பரதாரர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாகவும், ஆதாயம் தருவதாகவும் உள்ளது. ஆரம்ப காலம் தொட்டே இணையத்தில் பொருள்களை விற்க மட்டுமே விளம்பரங்கள் செய்து வந்த நிலையில், அரசியல் விளம்பரங்களும் அதீத வரவேற்பு பெற்றது. இதன்மூலம் ஆட்சியையும் பிடிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும்...

எல்லைமீறும் யூடியூப் சேனல்கள் - psragav

Image
எல்லைமீறும் யூடியூப் சேனல்கள்... (அவங்களுக்குதான் எல்லையே இல்லையே) 😂 நான் நேரடியா கேட்க விரும்பல, சுத்திவளைத்து கேக்குறேன். யூடியூப் சேனல் நடத்துறியா? இல்ல அஜால் குஜால் சேனல் நடத்துறீயா? உண்மையாவே டிஜிட்டல் தளம் ரொம்பவே அற்புதமானது. பலரை நல்ல முறையில் வளர வைத்திருக்கிறது. இந்த டிஜிட்டல் மீடியத்தை பயன்படுத்தி எத்தனையோ நபர்கள் சின்னத்திரை, வெள்ளித்திரை என்று வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா படம் எடுக்கும் அளவுக்கும் சில யூடியூப் சேனல்வாசிகள் உருவாகியுள்ளார்கள். இவர்களெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சில சேனல்கள் மட்டும், போகிற போக்கில் போயிட்டே இருப்போம்; எவன் கேப்பான் நம்பள? என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் கூட சமூக அக்கறை, வெட்கம் போன்றவை இல்லாமல், ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்துக் கொண்டு வலம் வருகின்றன. மக்கள் அதிகமா நடமாடுற எடம், இளைஞர்கள் அதிகம் உள்ள பொது இடங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்துக் கொண்டு அவர்களிடம், பிட்டுப்படம் பாப்பிங்களா? நீங்க வெர்ஜினா? முதல்முறை யாரை கிஸ் பண்ணிங்க? அது இதுன்னு ஆபாச கேள்விகள் (இல்ல இல்ல ஆசைக்கேள்விகள்ன்னு வச்சிப...

உன்ன முன்னாடியே பாத்திருந்தா, கண்டிப்ப உன்னதான் லவ் பண்ணிருப்பேன் - PS RAGAV

Image
ஹே!!! ஒன்னு சொல்லவா? ம்ம்ம்… சொல்லு “ உன்ன முன்னாடியே பாத்திருந்தா, கண்டிப்ப உன்னதான் லவ் பண்ணிருப்பேன் ”. இந்த வசனத்த நீங்க கேட்டிருக்கீங்களா? இல்ல யார்க்கிட்டையாச்சும் சொல்லிருக்கீங்களா? கண்டிப்பா இந்த வசனத்த கடந்துதான் வந்துருப்பீங்க. ஆமா, டீனேஜ் காலங்கள்ல இந்த காதலுங்குற கடைக்கு போகாம, இருந்திருக்க   வாய்ப்பே இல்ல.   “இந்த உலகத்துல ஒன்னவிட இன்னொன்னு பெட்டராதான் இருக்கும், அதுக்கு ஒரு முடிவே இல்ல. அதுக்காக நம்ம மனச மாத்திட்டே இருக்கக் கூடாது” என்று ஜானி திரைப்படத்துல ரஜினி பேசும் வசனம், எல்லாருக்கும், எல்லா இடத்துக்கும் பொருந்தும். காதலிலும் அப்படித்தான். ஒருவன் ஒரு பெண்ணை பார்க்கிறான். அவள்மீது ஆசைக் கொள்கிறான், அவளோடு பேசி பழக துடிக்கிறது அவன் நெஞ்சம். சிறிது காலம் அந்தப் பெண்ணை பின்தொடர்கிறான். அதை இதை ன்னு எதையாச்சும் செய்து அந்தப் பெண்ணின் மனதில் இடம்பிடிக்கும் அவன், கரம் பிடிக்கவும் நினைக்கிறான். இந்த வழிமுறைக்கு காதல் என பெயர் வைத்து, அந்தப் பெண்ணை பாசம் எண்ணும் கூண்டுக்குள் கட்டிப்போட்டுவிட்டு தானும் கூண்டுக்குள் அடைப்பட்டுக்கொள்கிறான். பாசம...

பயணிகளின் கனிவான கவனத்திற்கு - PS RAGAV

Image
நன்றி: PUT CHUTNEY RAJMOHAN ( கற்பனை கலந்த உண்மை கதை. எங்கள் கல்லூரியில் நடந்த சிறுகதை போட்டிக்காக எழுதியது ) பயணிகளின் கனிவான கவனத்திற்கு , வண்டி எண் 76842 திருச்சியிலிருந்து, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம் வழியாக கடலூர் துறைமுகம் வரை செல்லும் கடலூர் திருச்சி பாசான்ஜர் வண்டி மதியம் 3 மணி 40 நிமிடத்திற்கு 5வது நடைமேடையிலிருந்து புறப்படும். தம்பி இந்த ட்டிரயின் அரியலூர்ல நிக்குமா? ம்ம்ம் ……. நிக்கும் சார், என்றேன். வண்டி போயிடிச்சோன்னு பயந்துட்டே வந்தேன்பா. ஐயா பெரியவரே மணி 3.25 தான் ஆகுது. இன்னும் 15 நிமிஷம் இருக்கு வண்டி புறப்பட, வந்து இங்க உட்காருங்க, என்றார் என் அருகில் இருந்த மற்றொருவர். அந்த பெரியவர் எனக்கு நேர் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தார். பாசன்ஜர் வண்டி என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒருவர் ஒய்யாரமாக படுத்துக்கொண்டு போகும் அளவுதான் கூட்டம் இருந்தது. தம்பி நிச்சயம் இந்த வண்டி அரியலூர் ல நிக்கும்தான? நான் ஊருக்கு புதுசு தம்பி, என்று அந்த பெரியவர் வண்டி புறப்படும் வரை வினவிக்கொண்டே இருந்தார். எனக்...